1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சரோஜ் பத்திரன

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர்

இன்னும் சூடாகவே உள்ளது. போரின் 847 ஆவது நாளில், உக்ரைனின் நான்கு மாகாணங்களில் ரஷ்யா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதல்களால் அனல் மின் நிலையம் கடுமையாக சேதமடைந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் 218,000 பேர் மின்சாரத்தை இழந்துள்ளனர்.

ரஷ்யாவின் Tambov மற்றும் Adygea மாகாணங்களில் உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்களால் இரண்டு எரிபொருள் கிடங்குகள் தீப்பற்றி முற்றாக நாசமானதாக ரஷ்ய அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதற்கிடையில், தென் கொரியா உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறது. இது ஒரு தீவிரமான போர். ஆயுதங்களை வழங்கக்கூடாது என்ற தென் கொரியாவின் நீண்டகால கொள்கையின் தலைகீழ் மாற்றமாகவே இது நோக்கப்படுகிறது.

வட கொரியாவும் ரஷ்யாவும் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை அறிவித்ததையடுத்து தென் கொரியா இவ்வாறு அறிவித்தது.

இதேவேளை, உக்ரைனின் ஒடேசாவில் பகுதியிலிருந்து தனது மனைவிக்கு கடைசியாக அழைப்பு விடுத்த நிலையில் காணாமல் போன இலங்கை இராணுவ வீரர் பல மாதங்களுக்குப் பின்னர் தனது மனைவிக்கு மருத்துவமனையில் இருந்தவாறு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளார். அவர், அளுத்கம லக்மாலின் கசுன் கிரிஷாந்த பண்டார என்பவராகும்


மேலும் விவரங்கள் வீடியோவில்.


Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி