யாழில் பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்
ஒன்றையும் ஐந்து வாள்களையும் யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று (22) கைப்பற்றினர்.
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இன்று அதிகாலை விசேட ரோந்தில் ஈடுபட்டிருந்த யாழ்ப்பாணம் பொலிஸார், சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து சோதனையிட்டபோது அதற்குப் பதிவில்லை என்பது தெரியவந்தது.
இதனையடுத்து குறித்த இளைஞரை கைது செய்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகனில் சந்தேக நபரது வீட்டிலிருந்து ஐந்து வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.