1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சேதமடைந்த

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி விக்ரமசிங்க, அதன் புனரமைப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஜனாதிபதி செயலகத்தின் நிதியுதவியுடன், புனரமைப்புப் பணிகளைப் பூர்த்தி செய்ய இலங்கை இராணுவத்தின் உடனடி உதவியை வழங்குமாறு இராணுவத் தளபதிக்கு ஜனாதிபதி பணிபுரை விடுத்தார்.

20 இலட்சம் காணி உறுதிகள் வழங்கும் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் 13 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த தகுதி பெற்ற 27,595 பேரில் 192 பேருக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் புதிய கட்டடத்தில் இன்று (22) நடைபெற்றது.

மேலும், உயர் தேசிய பொறியியல் நிறுவனத்தின் 252 ஆங்கில டிப்ளோமாதாரர்களுக்கு ஜனாதிபதி தலைமையில் ஆசிரியர் நியமனங்களும் இதன்போது வழங்கப்பட்டன

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி