எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தானும் தனது கட்சியும் ஆதரவளிக்கவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி இன்று (22) சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் அவரது கட்சி உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
மட்டக்களப்பில் உள்ள அவர்களது கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இதன்போதே சிவநேசதுரை சந்திரகாந்தன் தனது கட்சி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.