துபாயில் வசிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும்
போதைப்பொருள் கடத்தல்காரனுமான தனுவன் சதுரங்கவின் சகா ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 20 கிராம் ஐஸ் போதைப்பொருள், 900 மில்லிகிராம் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த 300,000 ரூபா பணம் ஆகியவற்றை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 12, செபஸ்தியன் மாவத்தையில் வசிக்கும் 19 வயதுடையவர்.
விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வாழைத்தோட்டம் சுச்சரித அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுளார்.