ஜனாதிபதித் தேர்தலை ஒக்டோபர் 12ஆம் திகதிக்கு
முன்னர் நடத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
காலியில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியுடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதுவரையில் குறிப்பிட்ட அறிவிப்பை வெளியிடவில்லை எனவும், குறித்த திகதியில் அறிவிக்கப்படும் எனவும் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒக்டோபர் 17ஆம் திகதி கடைசி நாள் எனவும் எனவே, தேர்தல் ஆணையாளருக்கு 7 நாட்கள் அவகாசம் வழங்கினால் ஒக்டோபர் 12ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்