ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் நிலையில்,
அனைத்து முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களும் பொதுமக்களின் கருத்தை அறிந்து கொள்வதற்காக மக்கள் கருத்துக் கணிப்புகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் நாடளாவிய ரீதியில் தனது கடைசிசார்ந்த மக்கள் கருருத்துக் கணிப்பை ஆரம்பித்துள்ளார் என அரசாங்கத்தின் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த நடவடிக்கைகளுக்காக புலனாய்வு துறை அதிகாரிகள் குழுவும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த மக்கள் கணிப்பு அனைத்தும் மாவட்ட அளவில் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் மக்கள் கருத்துக் கணிப்பு முடிவுகளை கவனமாக ஆராய்ந்த பின்னரே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதை ரணில் விக்கிரமசிங்க தீர்மானிப்பார் எனத் தெரிய வருகிறது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக ஒவ்வொரு அரசியல் கட்சிகளாலும் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் முறையான மக்கள் கருத்துக் கணிப்புகளின் நான்கு. ஆய்வுகள் ஏற்கனவே பல்வேறு தகவல்களையும் புள்ளிவிவரங்களையும் வெளிப்படுத்தியுள்ளன.