ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
எதிர்வரும் 26 ஆம் திகதி மீண்டும் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அன்றைய தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது நாடு வங்குரோத்து நிலையில் இருந்து விடுபட்டுள்ளதாக ஜனாதிபதியால் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
தற்போது வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்ப தொடர்பான கலந்துரையாடல்களில் இராஜாங்க நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, அமெரிக்காவின் வொஷிங்டனில் கலந்து கொண்டுள்ளதாக அறிய முடிகிறது .
இந்தப் பேச்சுவார்த்தையில் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் என அரசாங்கத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
இதன் காரணமாக எதிர்வரும் 26ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உரையாற்றவும் பின்னர் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் அவசரமாக பாராளுமன்ற கூட்டத்தை கூட்டி இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக பாராளுமன்றத்துக்கு அறிவிக்கவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக