விடுதலைப் புலிகள் மீதான
தடையை தொடர இங்கிலாந்து முடிவு செய்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இதனை அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.
ஐக்கிய இராச்சியத்தின் "தடை செய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு ஆணையம்" புலிகள் மீதான தடையை நீக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான இந்த ஆணையம், நாட்டின் நாடாளுமன்றத்தால் நிறுவப்பட்ட ஒரு சுதந்திர நீதிமன்றமாகும்