மஹரகம, பன்னிபிட்டிய பிரதேசத்தில்
பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.
ஹினிதும பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹரகம, பன்னிபிட்டிய பிரதேசத்தில் நபர் ஒருவர் மதுபோதையில் தகராறு செய்வதாக 119 பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய, மஹரகம பொலிஸ் நிலையத்தின் இரவு நேர நடமாடும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று சந்தேக நபரைக் கைது செய்ய ஏற்பாடு செய்யப்பட்டபோது பொலிஸாரின் கடமைக்கு அவர் இடையூறு விளைவித்து நடந்து கொண்டுள்ளார்.
சந்தேக நபர் பின்னர் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் விசாரணையின் போது அவர் ஹினிதும பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் என தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.