ஹங்வெல்ல ஜல்தாரா பகுதியில்
16 வயது மாணவியை கூட்டுப் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 8 இளைஞர்களை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்குமாறு ஹோமாகம பதில் நீதிவான் திருமதி பிரியங்கா மத்தும படபாண்டி இன்று ( 23) உத்தரவிட்டுள்ளார் .
இன்றைய தினம் தனது காதலன் என கூறப்படும் இளைஞர் உட்பட 8 இளைஞர்களையும் பொலிஸார் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
இதன்போது குறித்த சந்தேக நபர்களை மேலும் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த அனுமதிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து ஹங்வெல்ல நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.