பாடசாலைகளில் கல்விசாரா
ஊழியர்கள் இன்று (24) மற்றும் நாளை (25) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
இதனையடுத்து பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் அதிபர்களுக்கு கல்வி அமைச்சினால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பாடசாலை சமூகத்துடன் இணைந்து பாடசாலைகளின் செயற்பாடுகளை நிர்வகிப்பதற்கான முறையான வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து மாகாண கல்விச் செயலாளர்கள் மற்றும் அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகள், கல்லூரிகள், கல்வி ஊழியர்கள், மாணவர் சமூகம் மற்றும் பௌதீக வளங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கல்வி அமைச்சின் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.