ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்
ஜனாதிபதி வேட்பாளருக்கு மூன்று தகுதிகள் இருக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிமான்ன தெரிவித்துள்ளார்.
அவரைப் பொறுத்தவரை வெற்றி பெறக் கூடிய வேட்பாளராக இருக்க வேண்டும். கொள்கை ரீதியான மதிப்பை பேணக் கூடியவராக இருக்க வேண்டும், அத்துடன் அரசியல் அடையாளங்களையும் பெருமையையும் மதிக்க வேண்டும்.
கொழும்பு 7, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (24) இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்