யாழ்ப்பாணம் - நெடுந்தீவு
கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களது படகும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களை கைது செய்ய முற்பட்ட போது படகிலிருந்து தவறி வீழ்ந்து கடற்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.