200 கிலோ கிராம் போதைப்பொருளை ஏற்றிச்
சென்ற உள்ளூர் மீன்பிடி படகு ஒன்று இலங்கையின் மேற்கு கடற்பரப்பில் கடற்பரப்பில் கைப்பற்றப்பட்டதுடன் 6 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு மேற்கே சுமார் 121 கடல் மைல் (சுமார் 223 கி.மீ) தொலைவில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது இந்தப் படகு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது சுமார் 200 கிலோகிராம் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற மீன்பிடி படகு கைப்பற்றப்பட்டதுடன் ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்ட படகு மற்றும் போதைப்பொருட்கள் கரைக்கு கொண்டு வரப்படுவதாகவும் கடற்படையிர் தெரிவித்தனர்