உயர்தரப் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும்
மாணவன் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேலைக்குச் செல்லும் தனது தாயாரை வணங்கி விட்டு அறைக்குச் சென்ற குறித்த மாணவன் அறைக் கதவைப் பூட்டிவிட்டு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பளை வீதி உலப்பனையைச் சேர்ந்த கே.எம்.பி.ஆர்.ஜி. குலசேகர என்ற 18 வயது மாணவனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவர் கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கணிதப் பிரிவில் பயின்று வந்துள்ளார்.
வனத்துறையில் பணியாற்றும் தனது தந்தை மறைத்து வைத்திரு ந்த அவரது துப்பாக்கியை எடுத்தே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கம்பளை சர்வதேச பாடசாலையில் கல்வி பயின்ற இந்த மாணவன், க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் 8 ஏ சித்தி மற்றும் B சித்தியுடன் சித்தியடைந்து உயர்தரத்தில் கல்வி கற்பதற்காக கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இணைந்துள்ளார்.
இந்த மாணவன் பெரும்பாலும் இணையவழியில் பாடங்களைச் கற்றுள்ளதோடு, கணினி மற்றும் கைத்தொலைபேசியை அடிக்கடி பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.