பாராளுமன்றத்தை எதிர்வரும்
2ஆம் திகதி அவசரமாக கூட்ட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தீர்மானித்துள்ளார்.
பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் 16ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் பிரதமர் தினேஷ் குணவர்தன விடுத்த கோரிக்கைக்கு அமைய நாடாளுமன்றம் கூட்டப்படுவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனாதிபதி அறிக்கையொன்றை வெளியிடுவதற்காகவே பாராளுமன்றம் இவ்வாறு கூட்டப்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
அன்றைய தினம் நாட்டின் பொருளாதார நிலை,குறித்து அவர் அறிக்கை வெளியிடவுள்ளார்.
நாடாளுமன்றம் வழமை போன்று 9ஆம் திகதி கூடவிருந்தது.