நிவித்திகல பாதகட பிரதேசத்தில் துப்பாக்கிப்
பிரயோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
திக்யோவிட்டவத்த, பாதகட பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
காயமடைந்தவர் திருமணமான நபராவார். இவர் தனது மருமகனுடன் வீட்டு முற்றத்தில் நின்றிருந்தபோது, முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிந்து காணப்பட்ட இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் சுடப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.