1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கடற்படையினரால் 200

கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டு காலி துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள மீன்பிடிப் படகின் உரிமையாளர் கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருத்து மாலதீவுக்கு தப்பிச் செல்லவிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்றே இவரைக் கைது செய்துள்ளது.
 
இவர் நீர்கொழும்பு பலகத்துறையில் வசிக்கும் 38 வயதுடைய வர்த்தகர் ஆவார்.
 
நேற்று  (25) இரவு 08.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
கைது செய்யப்பட்ட வர்த்தகர்  மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் தலைமையகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி