மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட
மூதூர் 5 பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 30 மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று (25) மாலை மாணவர் குழுவொன்று பாடசாலையில் மேலதிக வகுப்பில் கலந்து கொண்டபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் கூறினர்.
பாடசாலையை அண்மித்துள்ள வீடு ஒன்றில் காணப்பட்ட குளவிக் கூடு கலைந்தே மாணவர்கள் மற்றும் ஆசிரியரையும் கொட்டியுள்ளன.
இதனால் 22 மாணவர்களும் 8 மாணவிகளும், ஆசிரியரும் பாதிக்கப்பட்டு மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.