வதிவிடப் பத்திரம் வழங்காததற்காக
பெண் ஒருவரிடம் 25,000 ரூபா இலஞ்சம் பெற்ற கங்காவத்தை கோரளை பிரதேச செயலகத்தின் கிராம உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.