ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின்
போராட்டத்தின்போது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பிரயோகங்கைள மேற்கொண்டுள்ளனர்.
இதனால் கொழும்பு கோட்டை பிரதேசத்தில் பாரிய போக்குவர்து நெரிசல் ஏற்பட்டது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பொலிஸாரின் தடைகளை உடைத்து லோட்டர்ஸ் வீதியை நோக்கி நகர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக புறக்கோட்டை , ஒல்கொட் மாவத்தை மற்றும் அண்மித்த வீதிகளில் கடும் வாகன நெரிசல் காணப்படுகின்றன.