அநுராதபுரம் சிறைச்சாலையின் திறந்தவெளி சிறைச்சாலையில்
தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகள் நேற்று (25) தப்பிச் சென்றுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர.
பல திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறைவைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரும் , போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பலகலைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.
மல்வத்து ஓயாவுக்கு அருகாமையில் பயிர்ச் செய்கைக்காக இரு கைதிகளையும் அனுப்பியபோது திறந்தவெளி சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து இவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.