ஆசிரியர்களின் தொழிற்சங்க
நடவடிக்கையினால் இன்று (26) சில பாடசாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டது.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (26) சுகயீன விடுமுறையை அறிவித்து பணிக்கு செல்லாமல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இல்லாததால் கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயம் இவ்வாறு வெறிச்சோடி காணப்பட்டது.