மத ஆராதனையின்போது
பௌத்தம் மற்றும் ஏனைய மதங்களை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை நாளை (27) குரல் மாதிரி சோதனைக்கு உட்படுத்துமாறு கோட்டை நீதிவான் கோசல சேனாதீர உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை தற்காலிகமாக நீக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவருக்கு எதிராக சட்டவிரோத மோசடி விசாரணைப் பிரிவினர் தனியான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.