கொழும்பு கோட்டை ரயில்
நிலையத்துக்கு அருகாமையில் இன்று (26) இடம்பெற்ற ஆசிரியர் - அதிபர் போராட்டத்தைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியதால் பாதிக்கப்பட்ட மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூவரில் இருவர் சிகிச்சை பெற்று சிறிது நேரத்தில் வெளியேறியதாகவும் மற்றவர் கண் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.