யாழ்ப்பாணம் நெல்லியடிப்
பகுதியில் உள்ள புடவைக்கடை ஒன்றின் மீது சிலர் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களே இவ்வாறு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக கடையின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனடிப்படையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.