1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு

உட்பட்ட பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் கடந்த 2 ஆமர் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், காணாமல் போனதாக தேடப்பட்ட  நபர் நேற்று (27) வெட்டுக்காயங்களுடன் அடைத்து வைத்திருந்த வீட்டிலிருந்து தப்பிச் சென்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
 
தன்னை ஒரு குழுவினர் கடத்திச் சென்று சித்திரவதை செய்ததாக வாக்குமூலம் அளித்ததுடன், வெவ்வேறு இடங்களுக்கு  தன்னை மாற்றி வைத்து சித்திரவதை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 
இதனையடுத்து குறித்த நபர் தப்பி சென்ற வீட்டுக்கு அழைத்துச் சென்ற பொலிஸார் சாட்சியங்களை பதிவு செய்ததுடன், தடயவியல் சான்றுகளையும் பெற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
 
பின்னர் குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
இச்சம்பவம் தொடர்பாக குற்றத்தடுப்புப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி