ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்
குழுவைச் சேர்ந்தவரும் மற்றும் பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களான குடு ரொஷான் மற்றும் கரந்தெனிய சுத்தா ஆகியோரால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஐந்து கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வத்தளை மற்றும் கிராண்ட்பாஸ் பிரதேசங்களில் வைத்தே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 5 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான 3 கிலோ 492 கிராம் ஹெரோயின், முச்சக்கர வண்டி, கெப் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.