நுவரெலியா பஸ் நிலையத்தின்
பொது மலசலகூடத்தில் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (26) மாலை மலசலகூடத்தில் ஒருவர் வீழ்ந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி தகவலின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
நுவரெலியாவைச் சேர்ந்த 71 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்,
சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.