நாட்டின் தற்போதைய பொருளாதார
நிலைமை மற்றும் வெளிநாட்டு கடனை மறுசீரமைப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (26) உரையாற்றினார்.
அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது, நாட்டின் சில பகுதிகளில் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் சில நகரங்களில் பட்டாசுகள் வெடித்தும் ரபான் அடித்தும் பால் சாதம் வழங்கியும் வாணவேடிக்கை நடத்தியும் மக்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.
'ஆரம்பத்திலிருந்தே பிரச்சினையைப் புரிந்துகொண்டு நடைமுறைத் தீர்வுகளை அளித்து முடிவுகளைக் காட்டிய என்னுடன் நாட்டை முன்னேற்றுவீர்களா? அல்லது பாதையை மாற்றவா? நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி, “அவர்கள் தவறான பாதையில் சென்றால் என்ன ஆபத்துக்கள் ஏற்படும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே சரியான முடிவை எடுங்கள்’’ என்று தனது உரையின்போது ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.