இலங்கையில் வீதி விபத்துக்களில்
சிக்கி உயிரிழப்பவர்களின் நாளாந்த எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கு மதுபோதையில் வாகனம் செலுத்துவதே பிரதான காரணம் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.
நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் மேலும் தெரிவிக்கையில், மோட்டார் சைக்கிள் விபத்துக்களினால் அதிக எண்ணிக்கையான மரணங்கள் பதிவாகின்றன என்றும் கூறினார்.