முன்னாள் சுகாதார அமைச்சர்
கெஹலிய ரம்புக்வெல்லவினால் சமர்ப்பிக்கப்பட்ட ரிட் மனுவை மேலதிக பரிசீலனைக்காக ஜூலை முதலாம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் விசாரணை முடியும் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை இரத்துச் செய்யுமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனு இன்று (27) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நிர்மலன் விக்னேஸ்வரன் உண்மைகளை முன்வைத்தார்.