பாறுக் ஷிஹான்
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு
உட்பட்ட உட்புற நகர் பகுதி ஒன்றில் பஜாஜ் டிஸ்கவர் ரக மோட்டார் சைக்கிள் ஒன்று கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜயலத் வழிகாட்டலில் பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே. சதீஷ்கர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த மோட்டார் சைக்கிளை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள் தற்போது சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த மோட்டார் சைக்கிள் வேறு பகுதியில் இருந்து ஏதேனும் குற்றச் செயலுக்கு கொண்டுவரப்பட்டதா அல்லது திருடப்பட்ட மோட்டார் சைக்கிளா என பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.