துபாய், கத்தார் நாடுகளில் தொழில்
பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றிய பெண் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் தெமட்டகொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தெமட்டகொடயைச் சேர்ந்த ஷிப்னா என்ற பெண்ணே துபாய் மற்றும் கத்தாரில் பல்பொருள் அங்காடிகளில் வேலைவாய்ப்பு வழங்குவதாகத் தெரிவித்து பண மோசடி செய்துள்ளார்.
தெமட்டகொடையைச் சேர்ந்த மூவரிடம் இலட்சக் கணக்கான ரூபா பணத்தைப் பெற்று வாக்குறுதியளித்தபடி வேலை வழங்கவில்லை என பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு 3 முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.
குறித்த முறைப்பாடுகளின் அடிப்படையில், இந்தப் பெண் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.