தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்
தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி சுகவீனமுற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அவரால் பாராளுமன்ற அமர்வுகளில் பங்குபற்ற முடியாத காரணத்தினால் பாராளுமன்றத்திற்கு மூன்று மாத கால விடுமுறை கோரப்பட்டு அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது .
சுகவீனம் காரணமாக கட்சியின் தலைமை மற்றும் நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விலகியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .