ஒருவரிடமிருந்து 25,000் ரூபாவை
இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் மஹாபாகே பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வத்தளை பல்லியவத்தை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று (04) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.