சுட வேண்டிய இடத்தில் சுட
வேண்டும் என்றும் துப்பாக்கி என்பது விளையாட கொடுக்கப்பட்ட ஒன்றல்ல என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் பேசிய அமைச்சர், துப்பாக்கிகளை சரியான விடயத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்றும், போதைப்பொருள் சிக்கலில் இருந்து பிள்களையும் குடும்பங்களையும் காப்பாற்றும் அதே நோக்கத்துடன் செயற்பாடுகள் தொடரும் என்றும் நான் கூறியபோது பலர் தன்னை விமர்சித்ததாக கூறினார்.
தாம் அமைச்சுப் பதவியில் இருக்கும் வரை போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவேன் எனவும் கடந்த டிசம்பர் மாதம் தனது பாதுகாப்பைப் பற்றி சிந்திக்காமல் யுக்திய நடவடிக்கைகளை ஆரம்பித்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் மறைந்திருந்து இலங்கையில் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் ஐந்து பாதாள உலகக் குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் ஏனைய பாதாள உலகக் குழுக்களையும் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.