சகல சட்டவிரோத செயற்பாடுகளையும்
இல்லாதொழிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் தற்போது நடைமுறையில் உள்ள 'யுக்திய' நடவடிக்கை இன்று (4) முதல் புதிய வீரியத்துடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
'யுக்திய' நடவடிக்கைக்கு இலங்கை இராணுவத்தினரின் ஆதரவும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கொழும்பை சுற்றியுள்ள பல பகுதிகளில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அது விரைவில் முழு நாட்டையும் உள்ளடக்கி விரிவுபடுத்தப்படும் எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தல்துவ மேலும் தெரிவித்தார்.