யாழ்ப்பாணத்துக்கு கொண்டு
செல்லப்பட்டுள்ள இரா.சம்பந்தனின் உடல் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
விசேட விமானம் மூலம் சம்பந்தனின் உடல் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
யாழ். தந்தை செல்வா கலையரங்கில் இன்று காலை முதல் மாலை 4 மணி வரை அன்னாரின் உடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர் விமானம் மூலம் திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது.
சம்பந்தனின் இறுதிக்கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.