எல்பிட்டி நிர்வாக பொது சுகாதார
அதிகாரி தீபால் ரோஷான் குமார விதானாச்சி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸ தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நவீன கைத்துப்பாக்கி மற்றும் இத்தாலியில் தயாரிக்கப்பட்ட ஆயுதமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிநாட்டில் வசிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒருவரே 11 இலட்சம் ரூபாவை சந்தேக நபருக்கு வழங்கி இந்தக் கொலைக்கு ஒப்பந்தம் செய்துள்ளமையும் விசாரணைகளில் தெரிய வருகிறது.