யுக்திய- 2 நடவடிக்கையுடன்
இணைந்து இன்று (04) காலை அம்பலாங்கொடை பிரதேசத்தில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்காக பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து செயற்பட்டனர்.
இந்த நடவடிக்கையில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்தி்ச் சென்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அந்த நடவடிக்கையின் போது பிடி விறாந்து பிறப்பி்க்கப்பட்ட ஐவரும் கைது செய்யப்பட்டனர்.