ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும்
இந்தியா, இலங்கை மற்றும் பூட்டானுக்கான இஸ்ரேல் தூதுவர் நோர் கிலோன்(Naor Gilon) ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, இஸ்ரேல் கொன்சியூலர் தினேஷ் ரொட்ரிகோ ஆகியோர் கலந்துகொண்டனர்.