1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அக்குறணையில் உள்ள உணவகம்

ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் கண்டி - மாத்தளை வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மேலும் பல கடைகளுக்கு தீ பரவியதன் காரணமாக குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இன்று (05) அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், இதுவரையில் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
 
உணவகத்தில் சுமார் 50 எரிவாயு சிலிண்டர்கள் இருப்பதாக உரிமையாளர்கள் தெரிவித்ததால் தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி