ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்
வழமையான பொதுச் செயலாளராக செயற்படும் உரிமையில் தலையிட வேண்டாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஊடகவியலாளர் சந்திப்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி எந்தவொரு குழுவும் சீர்குலைக்க முயற்சித்தால், தாம் அதை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்.
எனவே நாசவேலைகளை செய்யாமல் சுதந்திரமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னேற்றத்துக்காக உழைக்க அனுமதிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கட்சியின் தலைமையகம் யாருடைய சொத்தும் அல்ல என்றும், அங்கு வரும் மக்களுக்கும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு பொலிஸ் மா அதிபர், பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் மருதானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு அறிவித்துள்ளதாகவும் ஜயசேகர தெரிவித்தார்.