கிழக்கு மாகாண ஆளுநரினால்
வழங்கப்படும் ஜனநாயக விரோத இணைப்பாளர் பதவிகளை பெற்றுக் கொள்ள வேண்டாமென கட்சியின் முன்னாள் உள்ளூராட்சி சபைத் தலைவர்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி அறிவுறுத்தியுள்ளது.
கட்சியின் அறிவுறுத்தலை மீறி யாராவது பதவிகளைப் பெற்றுக் கொண்டால் அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இவ்வாறானதொரு அறிவித்தலை நேற்று (04) விடுத்திருந்தது.
இந்நிலையில், கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்பாளராக ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளர் வாசித் அலி நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.