நீதிமன்ற அனுமதியின்படி ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சியின் வழமையான பொதுச் செயலாளராக பதவியேற்கச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை பொலிஸார் கட்சி தலைமையகத்துக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.
டார்லி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தைச் சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததுடன் கட்சி உறுப்பினர்கள் குழுவொன்றும் அங்கு பிரசன்னமாகியிருந்தது.
பின்னர் வெளியில் இருந்து பல கடிதங்களில் தயாசிறி ஜயசேகர கையொப்பமிட்டதுடன் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக ஜயசேகர தெரிவித்தார்.