1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மாதம்பை, இரட்டைக்குளம் பகுதியில்

நேற்றுக் (04) காலை இடம்பெற்ற பஸ் - லொறி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ்ஸின் சாரதி நீர்கொழும்பு  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று (04) மாலை உயிரிழந்துள்ளார்.
 
சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் இன்று (5) அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிகப்பட்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையும் உயிரிழந்துள்ளார்.
 
இந்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த 26 பேர் படுகாயமடைந்த நிலையில் சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி