பதுளை - சொரணதோட்டை வீதியில்
வலிஹிட பிரதேசத்துக்கு அருகில் லொறி ஒன்று கவிழ்ந்ததில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (05) நண்பகல் 12.00 மணியளவில் பிரதான வீதியில் லொறி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த லொறியில் பயணித்தவர்கள் மொனராகலையில் வீதி நிர்மாணப் பணிகளில் ஈடுபடச் சென்றவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காயமடைந்த மூவரும் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.