கணினி அவசரகால பதிலளிப்பு பிரிவின்
கூற்றுப்படி, இந்த ஆண்டின் கடந்த 5 மாதங்களில் இணையம் மூலமான துஷ்பிரயோகங்கள் தொடர்பாக 1,093 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்கள் தொடர்பில் 7,916 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சருக தமுனுகல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த சருக தமுனுகல, இரண்டு மாதங்களுக்குள் சிறுவர்கள், குறிப்பாக இணைய மூலமாக சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 27 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
குறித்த முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.